திருப்பதி: திருமலை தேவஸ்தானத்திற்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராம சுவாமி கோயிலின் வருடாந்திர தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.ராமர்,சீதை மற்றும் லட்சுமணனின் விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு கோவில் குளத்தில் வலம் வந்தது.அங்கு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம ராம என்று கோஷமிட்டபடி தரிசித்தனர்.