Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறிஞ்சி மலை குமரனுக்கு 1008 காவடி! சிவகாசி சிவன் கோயிலில் தங்கத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நல்லாண் பிள்ளைபெற்றாள் கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
02:04

செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் திருமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி ஒன்றியம் நல்லான் பிள்ளை பெற்றாள் திருமுருகன் கோவிலில் 72ம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1 மணிக்கு சக்திவேல் ஊர்வலம் நடந்தது. மாலை 3 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இன்ஸ்பெக்டர் கோட்டீஸ்வரன், வடம் பிடித்தலை துவக்கி வைத்தார். தேர் பவனியின் போது பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலம் வந்தனர். மாலை 4 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழா குழுவினர் தேவராஜன், குமரவேல் கலந்து கொண்டனர்.அருவாள் குத்திய பக்தர்முருகப்பெருமானின் பக்தர்கள் அலகு குத்துவது, கடப்பாறை உருவுதல், மிளகாய் சாந்து அபிஷேகம், ஆணி பாதுகை அணித்து செல்வது என தீவிரமாக பக்தியை வெளிப்படுத்துவது வழக்கம்.நல்லாண் பிள்ளை பெற்றாளைச் சேர்ந்த முருக பக்தர் ராஜி, தனது வாயில் வேலுக்கு பதிலாக அருவாளை சொருகி பக்தியை வெளிப்படுத்தினார். அத்துடன் உடல் முழுவதும் குத்துவாளை போன்ற கத்தியை சொருகி இருந்தார். இவரின் பக்தி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar