Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருமலையில் நெரிசல் வி.ஐ.பி., தரிசனம் ... ஈஸ்டர் திருநாள் கோலாகலம் சர்ச்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊர் கூடி நிலவு வழிபாடு: நூற்றாண்டை கடந்தும் தொடரும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2015
01:04

காரைக்குடி: மக்கள் அனைவரும் சண்டை, சச்சரவுகளை மறந்து ஒற்றுமையாக வாழ காரைக்குடி பகுதிகளில், நிலவு வழிபாடு நூற்றாண்டை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. காரைக்குடி அருகேயுள்ள பாலைய நாட்டு கிராமங்கள் எனப்படும் பாலையூர், கண்டனூர், கோட்டையூர், வேலங்குடி, மணச்சை, நேமத்தான்பட்டி, கானாடுகாத்தான், கொத்தரி, கருவியப்பட்டி, வடகுடி உட்பட 16க்கும் மேற்பட்ட கிராமங்களில், அறுவடை முடிந்து மாசி வளர்பிறை நாளில் ஆரம்பித்து, பவுர்ணமி வரை நிலவை வணங்கி கொண்டாடும், நிலாவாண்டை எனும் கலாசார வழிபாட்டு மரபு தொன்று தொட்டு நடந்து வருகிறது. வளர்பிறை ஆரம்பித்து பவுர்ணமி வரையிலான நாட்களில், ஊருக்கு பொதுவான இடத்தில்,ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து செங்கற்களும், செம்மண்ணும் கொண்டு சதுரமாய் கட்டி, நடுவில் மனை போட்டு தினமும் ஒன்று கூடி, இயற்கை கடவுளான நிலவை (சந்திரனை) வழிபடுவர். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் இருந்து விதவிதமான பலகாரங்கள் கொண்டு வந்து, செங்கல்லால் கட்டப்பட்ட சதுரத்துக்குள் வைப்பர். நிவேதனமாக வாவரச மர இலை, பூக்களை வைப்பார்கள். பெண்கள், பெண் குழந்தைகள் இருவரிசையாக நின்று நிலவை வாழ்த்தி பாடல் பாடுவர். வாழ்த்தி முடிந்ததும், பலகாரங்கள் அனைத்தும், ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி கலக்கி எல்லோருக்கும் வழங்கப்படும். விழா இறுதி நாளில், கும்மி, காவடி இறங்குதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சி இடம்பெறும்.

ஜி. சந்திரன், சுப்பையா, வேலங்குடி: மாசி பங்குனி வளர்பிறை நாட்களில் நிலவு வழிபாடு இப்பகுதியில் தொன்று தொட்டு மேற்கொண்டு வருகிறோம். மற்ற பாலைய நாட்டு கிராமங்களில் மாசி மாதமும், வேலங்குடியில்பங்குனி மாதமும் நடக்கும். இயற்கை நமக்கு நன்மை பயக்க வேண்டும், என இயற்கையை வழிபடும் முறையே இது. வளர்பிறையின் இறுதிநாளான பவுர்ணமி அன்று, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிடுவர். அதில் முதல் பொங்கல் யாருக்கு பொங்குகிறதோ, அவர்கள் வீட்டில் உள்ள ஒரு சிறுவர் மாப்பிள்ளையாகவும், இரண்டாவது பொங்கல் யாருக்கு பொங்குகிறதோ, அவர்கள் வீட்டில் உள்ள சிறுமி பெண்ணாகவும் பாவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பெரியவர்கள் வாழ்த்து கூறி ஆசிர்வதிப்பர். வழிபாட்டு நாட்களில் ஊர் பலகாரம் மொத்தமும் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்படும். இதன்மூலம் ஒற்றுமை நிலை நாட்டப்படுகிறது. இறுதிநாளில் காவடி எடுத்து வேல்போடும் நிகழ்ச்சி நடக்கும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar