Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் உழவாரப் ... சக்தி மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி! சக்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை உரைவள கருத்தரங்கு!
எழுத்தின் அளவு:
பன்னிரு திருமுறை உரைவள கருத்தரங்கு!

பதிவு செய்த நாள்

07 ஏப்
2015
12:04

சென்னை: தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, தருமபுர ஆதீனத்தின் சமய பிரசார நிலையத்தில், நாளை காலை, நுாதன செல்வ முத்துக்குமாரசுவாமி உற்சவ மூர்த்தி பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக பெருவிழா, நடைபெறுகிறது. அதை முன்னிட்டு, பன்னிரு திருமுறை உரைவளக் கருத்தரங்கு நடக்கிறது. ரூ.6,000 விலையில் கடந்த, 1864ம் ஆண்டு, திருமயிலை சுப்பராய ஞானியார், முதன் முதலாக, திருஞான சம்பந்தரின் முதல் மூன்று திருமுறைகளை அச்சிட்டார். 1865ல் சுந்தரர் தேவாரமும், 1866ல், திருநாவுக்கரசர் தேவாரமும் அச்சிட்டார். அதையடுத்து, 1931ம் ஆண்டு வரை, பன்னிரு திருமுறைகளும், மூலம் மட்டும் பலரால் அச்சிடப்பட்டன. அவற்றுக்கு உரை எழுதுதல் பெரும் பாவம் என, சைவர்களால் கருதப்பட்ட நிலையில், 1913ம் ஆண்டில், சுந்தரர் தேவாரத்திற்கு மட்டும், காஞ்சிபுரம் மகா வித்துவான், ஸ்ரீமத் இராமானந்த யோகிகள், பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேட உரை ஆகியவற்றை எழுதி அச்சிடுவித்தார். இந்த நிலையில், தருமை ஆதீனம், 25வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள், 1953ம் ஆண்டு முதல், ஒவ்வொரு திருமுறைக்கும், தகுந்த அறிஞர்கள் மூலம், ஒன்பது திருமுறைகள் வரை அச்சிட்டு வெளியிட்டார்.

அவருக்கு பின், 26வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக சுவாமிகள், எஞ்சியுள்ள திருமுறைகளை, உரையோடு அச்சிடுவித்தார். மொத்தம், பன்னிரு திருமுறைகளின் 16 தொகுதிகள், 2011ல், மூன்றாம் பதிப்பாக, தருமை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திருமுறை உரை நுாலிலும், அவ்வத் திருமுறை உரைத்திறம், தல அட்டவணை, தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள், திருமுறை ஆசிரியர் வரலாறு, பாடல் முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொல்லகராதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு திருமுறை உரை நுாலும், 1200க்கும் மேலான பக்கங்கள் கொண்டவை. 16 தொகுதிகளும், 6,000 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன. எப்போதும் இவற்றின் உரை சிறப்புகள் குறித்து, வரும், 9ம் தேதி மாலை, 5:15 மணிக்கு, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, தருமை ஆதீனத்தின், சமய பிரசார நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள மணிவிழா மண்டபத்தில், சிறப்பு சொற்பொழிவுகள் நடக்கின்றன. அதேநேரம், 1950க்கு பின், 2014ல் மறுபதிப்பு கண்ட, திருக்குறள் - உரைவளம் என்ற மூன்று தொகுதிகள் அடங்கிய நுால் வெளியீட்டு விழாவும், அன்றைய தேதியில், நடக்க உள்ளது.

திருக்குறள் - உரைவளம் நுால், அறம், பொருள், இன்பம் என்ற மூன்று தொகுதிகளை உடையது. ஒவ்வொரு குறளுக்கும், பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காளிங்கர் ஆகியோர் உரைகளும், சில பாடல்களுக்கு கிடைத்த தருமர், தாமத்தர், நச்சர் ஆகியோரது உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளும், 900 ரூபாய்க்கு கிடைக்கின்றன. வரும், 9, 10 தேதிகளில் மாலை, திருமுறை சாத்திர உரைவள கருத்தரங்கு, தருமையாதீன மணிமண்டபத்தில் நடக்க உள்ளது.

தொடர்புக்கு: 94422 22419

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar