ஆழ்வார் திருநகரிக்கு அருகில் உள்ளது மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில். தாயார் பூதேவி துர்வாசர் உபதேசித்த அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து தவம் செய்து தாமிரபரணியில் மூழ்கி எழும்போது இரண்டு பெரிய குண்டலங்களைப் பெற்றாள். இதனால் ஸ்ரீ பேரை என்ற திருநாமம் பெற்றாள். இத்தலத்துக்கும் திருப்பேரை என்ற பெயர் ஏற்பட்டது. பங்குனி பவுர்ணமியில் தாம் பெற்ற மீன் வடிவமுள்ள இரண்டு குண்டலங்களை பெருமாளுக்குச் சமர்ப்பிக்க, பகவான் மகரநெடுங்குழைக்காதர் என்ற திருநாமம் பெற்றார்.