திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் உள்ளது முத்தாரம்மன் கோயில். இக்கோயிலில் ஞானமூர்த்தீஸ்வரரும் முத்தாரம்மனும் ஒரே பீடத்தில் வடதிசை நோக்கி அமர்ந்திருக்கிறார்கள். அம்மை நோய் கண்டவர்கள் இத்தல அம்மனை வழிபட, உடனே குணமாகி விடுகிறது. கை, கால், ஊனம், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இத்தல அம்பாளை வணங்கி குணமடைகின்றனர்.