Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ... வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்! வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடிசித்திரைத் திருவிழா துவக்கம்: பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது!
எழுத்தின் அளவு:
பரமக்குடிசித்திரைத் திருவிழா துவக்கம்: பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
05:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டுடன் துவங்கியது. மே 3 ல் நள்ளிரவு ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் பெருமாள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக காலை 9.30 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் காப்பு கட்டப்பட்டது.  பின்னர் தீர்த்தகுடங்கள் புறப்பாடாகி, யாகசாலையில் சேர்க்கையானது. இரவு பெருமாள் ஆடி வீதியில் வலம் வந்து, யாகசாலை முன் வேத கோஷம் முழங்க, சிறப்பு தீபாராதனை நடந்தது. மே 3 ல் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பணசாமிக்கு கும்பத்திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து இரவு 2 மணிக்கு அநேக தீவெட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகளுடன், பெருமாள் ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன், பூப்பல்லக்கில் அலங்காரமாகி வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். மறுநாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, அநேக பக்தர்களால் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து மே 5 ல் இரவு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து தசாவாதாரமும், மறுநாள் கருடசேவையும், மே 8 ல் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் திருக்கோயிலை அடைவார். ஏற்பாடுகளை
தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar