1000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2015 12:05
ரிஷிவந்தியம்: எடுத்தனுõரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுõரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருங்கற்களால் கட்டப்பட்ட அண்ணாமலையார் உண்ணாµமுலையம்மன் மற்றும் துர்கையம்மன் ÷ காவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புதுப்பிக்கப்பட்டு, துர்கையம்மன் கோவிலில் புதிதாக 16 கால் மகா மண்டபம் கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி முதல்கால பூஜைகளும், 30ம் தேதி இரண்டாம் கால பூஜைகளும் நடந்தது. 1ம் @ததி காலை 7: 05 மணிக்கு அண்ணாமலையார் கோவிலிலும், 8:10 மணிக்கு துர்கையம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.பி., தெய்வீகன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.