Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரக உற்சவ விழாவில் பரவசம்! நடராஜருக்கு சித்திரை திருவோண வழிபாடு! நடராஜருக்கு சித்திரை திருவோண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்வெட்டியால் சாதம் கிளறிமக்களுக்கு அன்னதானம்: 120 ஆண்டு விநோத திருவிழா!
எழுத்தின் அளவு:
மண்வெட்டியால் சாதம் கிளறிமக்களுக்கு அன்னதானம்: 120 ஆண்டு விநோத திருவிழா!

பதிவு செய்த நாள்

11 மே
2015
12:05

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் கோவிந்தசாமி கோயிலில் மண் வெட்டியால் சாதத்தை கிளறி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விநோத விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் கோவிந்த சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரையில் அன்னதான விழா நடக்கும். நடப்பாண்டு நேற்று முன்தினம் நடந்த இவ்விழாவில் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, உணவு சமைத்து சுவாமிக்கு படையல் வைப்பர். பொதுமக்களுக்கு பரிமாறும் முன்பு சாதத்தை மண்வெட்டி மூலம் கிளரப்படும். நடப்பழகர் புறப்பாடாகி இருப்பு நிலை வந்தவுடன் கொண்டாடப்படும் அன்னதான விழாவில் பங்கேற்பதற்காக 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி உணவு சமைத்து கோவிந்தசுவாமிக்கு படையல் வைப்பார்கள்.

கிராமத்தலைவர் குருந்து கூறுகையில்: சித்திரையில் அழகருக்கு விழா நடக்கிறது. அதுசமயம் அழகர் புறப்பாடாகி இருப்பு நிலை வந்தவுடன் இங்கு அன்னதான விழா நடத்துவோம். பெண்கள் காய்கறி நறுக்குவர். ஆண்கள் சமையல் செய்வர். சமையலுக்கு வெள்ளைபூசணிக்காய் சாம்பார் பிரதானமாக இருக்கும். 850 படி அரிசியில் சாதம் தயாரிக்கப்படும்.

முதலில் கோவிந்த சுவாமிக்கு அன்னபூஜை நடந்து, பூஜாரி தொட்டுக் கொடுக்கும் மண்வெட்டியைக் கொண்டு சாதம் கிளறப்படும். கோவிந்தன் கோடாங்கி என்பவரால், ஐந்து தலைமுறையாக தொடர்ந்து இதுபோன்ற அன்னதான விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு முன்பு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தபசு திருநாள் அன்று மேளதாளங்கள் முழங்க கை இடுக்கில் வைத்து திரி துவக்கம் மூலம் 3 நாட்கள் சுற்றுப்பகுதிகளில் நெல், மிளகாய், புளி, பருப்பு, அரிசி இவைகளை யாசகமாக பெற்று அதனைக் கொண்டு இந்த அன்னதான விழாவை நடத்துவோம். இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பர். இவ்விழா முடிந்ததும், மழை பெய்யும். இதற்கான ஏற்பாடுகளை யாதவ மக்கள் செய்தனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar