Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணியாளர்களுக்கு மரியாதை கொடுங்க! தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தீரட்டும் சர்க்கரை நோய்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
06:06

கோவிலை சுற்றி வருவது உடலில் சர்க்கரையை குறைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதுதான் உண்மை.இன்று பல லட்சம் மக்கள் சுகர் எனும் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். அந்தக் காலத்தில் 60 வயதைக் கடந்த பின் சிலருக்கு வந்துள்ளது. முன்பெல்லாம் இந்த நோய்க்கு மருந்துகளும் அவ்வளவாக இல்லை. இன்றோ, 35-40 வயதுக்குள்ளேயே இந்த நோய் வந்து விடுகிறது. பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றாலும், இந்த நோயாளிகளின் மனநிலை ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறது. நடக்கும் போது கல்தட்டி காயம் ஏற்பட்டால் கூட, இது என்னபாடு படுத்தப் போகிறதோ என பயந்து போகிறார்கள். மருத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆன்மிகமும் சர்க்கரை குறைய வழிகாட்டுகிறது.

உடலின் அனைத்து உறுப்புக்களின் முடிவுப் புள்ளிகள் நம் கால்களின் அடியில் உள்ள பாதத்தில்  முடிவடைகின்றன. இதனால் தான், இக்குறைபாட்டுக்கு எந்த மருந்து எடுத்தாலும், நடைப்பயிற்சி மிக மிக அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். அதிலும் செருப்பு அணிந்து நடை பயிற்சி செய்வதை விட, அணியாமல் நடப்பது மிகவும் சிறந்தது. தெருவில் செருப்பின்றி இக்காலத்தில் நடக்க முடியாது. ஆனால், கோவில்களில் இது சாத்தியம். இதனால், வெளியில் நடப்பதை விட கோவிலுக்குள் வலம் வருவது சுகரை வெகுவாகக் குறைக்கும். சுகர் மட்டுமல்ல... இதய நோய், உடல் எடை குறைவு, தைராய்டு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் அஜீரணம் நோய்களும் கோவில் வலத்தால் கட்டுப்படுகிறது. முன்பெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினமும் தங்கள் வீட்டுக்கு  அருகில் உள்ள கோவிலை 5 அல்லது 9 முறை சுற்றி வருவது வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அது மூன்றாகச் சுருங்கியது. இப்போது  ஒருமுறை சுற்றி விட்டு வெளியேறி விடுகிறார்கள். கோவிலை 9 முறை வலம் வந்தால், சுகர்  இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வராமல்  இருக்க அனுக்கிரகம் செய்யும். இதனால் தான் குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வலம் வரச் செய்ய வேண்டும். சிறுவயதிலேயே ஏற்படும் இந்தப்  பழக்கம்,  பிற்காலத்தில் நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். இங்குள்ள சுத்தமான சூழலும் மனதிற்கும் உடலுக்கும் ஆறுதல் தரும். கோவில் வலம் உடலுக்கு மட்டும் அல்ல... மனஅழுத்தம் குறையவும் வழி செய்கிறது. கோவில்களின் சுற்றளவைப் பொறுத்து, பிரகாரத்தை மூன்று முதல் ஒன்பது தடவை வரை சுற்றி வாருங்கள். 4கிமீ துõரம் நடை பயிற்சி செய்த பலன் கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar