விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. அப்பர் பிறந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தையொட்டி, விருத்தாசலம் பழமலை நாதர் உழவார திருக்கூட்டம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது. அதில், 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கோவில் வெளி பிரகாரத்தில் மண்டியிருந்த புற்கள், முட் செடிகளை அகற்றி; உள்பிரகாரம், நுõற்றுக்கால் மண்டப பகுதிகளில் துõய் மை செய்தனர்.