Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புதுச்சேரி எல்லையம்மன் கோவில் ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்! திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீஸ்வரர் கோவிலில் ரகசிய அறை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
திருக்காமீஸ்வரர் கோவிலில் ரகசிய அறை கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
12:07

புதுச்சேரி: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், அன்னியர் படையெடுப்பு களில் இருந்து, சுவாமி சிலைகளை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்ட ரகசிய சுரங்க அறை கண்டுபிடிக்கப்பட்டது. புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில், தருமபரிபால சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆடிப்பூரத்தன்று, கோவில் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர் நேராக விழுவது தனிச்சிறப்பாகும். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, 11 கோடியே 55 லட்சம் செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவில் மூலவர் சன்னிதிக்கு பின்புறம், தென்மேற்கு திசையில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் (உற்சவ அம்பாள் சுவாமி) சன்னிதியின் தரைத்தளம் பெயர்த்தெடுக்கப்பட்டு, கருங்கற்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. காலை, 9:00 மணியளவில், பணியாளர்கள், தரை யில் கற்களைப் பெயர்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு சுரங்கம் போன்ற அமைப்புடன் பள்ளம் தென்பட்டது.

தகவல் அறிந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தில்லைவேல், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, எஸ்.பி., ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். சுரங்கம் போன்ற தென்பட்ட இடத்தில், கற்களை முழுவதுமாக வில்லியனுார் தீயணைப்பு படையினர் அகற்றினர். அங்கு, ஐந்து அடி ஆழத்தில், 10க்கு 8 அடி என்ற அகலத்தில் ரகசிய பாதுகாப்பு அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முழுவதுமாக கருங்கற்களை கொண்டு, உறுதி யாக அறை அமைக்கப்பட்டிருந்தது; உள்ளே எந்த பொருளும் இல்லை. மன்னர்கள் காலங்களில், அன்னியர் படையெடுப்புகளின் போது, சுவாமி சிலைகளை வைத்து பாதுகாக்க, இந்த ரகசிய பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு இருக்கலாம் என, கருதப்படுகிறது. கோவிலில் ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதால், ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். இதனால், கோவில் வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar