Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலை ஆடிக்கு கூடுதுறையில் குவிந்த ... மணி ஓசைக்காக மாட்டு வண்டி பயணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,000 ஆண்டுக்கு முற்பட்ட சத்திரம்: பழநி அருகே கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2011
10:07

பழநி : பழநி ஐவர்மலையில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியது: இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மூலம், சமண முனிவர்கள் இப்பகுதியை அயிரை (சிறிய) மலை என, பெயரிட்டதற்கான சான்று உள்ளது. பின், ஐவர் மலையாக மருவியுள்ளது. இம்மலை தொடர்பான தகவல்கள், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் உள்ளன. மேற்குப்புறத்தில், தென்மேற்கு திசை நோக்கிய இயற்கையான பாறைத்தடுப்பு உள்ளது. இதை, கி.பி.12ம் நூற்றாண்டு (சமணர் காலம்) முதல், சத்திரமாக (சாவடி) பயன்படுத்தியுள்ளனர். அயிரை மலையைச் சார்ந்த கொழுமம் பெருவழிப்பாதை என, பழநி மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. மதுரையில் துவங்கும் இப்பெருவழி, மேற்கு நோக்கிய பாதையில் கொழுமம் வழி, கோழிக்கோடு சென்றடைந்துள்ளது. அரபிக்கடல் வழி, பாரசீகம், ரோம் ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து இருந்துள்ளது. சங்க கால வணிகர்கள் இப்பெருவழியை பயன்படுத்தியுள்ளனர். சமணர்களின் கல்குகை, முதுமக்கள் தாழி, வட்டக்கல் அமைவு போன்றவற்றின் அருகே, இயற்கையான பாறைத்தடுப்பின் மீது வட்ட வடிவ சத்திர அமைப்பு உள்ளது. பின்னர், கி.பி.16, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த (கொங்குச் சோழர், நாயக்கர் கால) செங்கல் தற்போதும் உள்ளது. இதன் மூலம் 2,000 ஆண்டுகளாக, சத்திரம் பயன்பாட்டில் இருந்ததை உறுதிப்படுத்தலாம். அகழாய்வு நடத்தினால், தொன்மையான தகவல்களைப் பெற முடியும். இவ்வாறு நாராயணமூர்த்தி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar