Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய ... நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கிராமங்களில் நாயக்கர்கள் கால நடுகற்கள்!
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கிராமங்களில் நாயக்கர்கள் கால நடுகற்கள்!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
12:08

காந்திகிராமம்: திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் நாயக்கர் கால நடுகற்கள் அதிகளவில் இருப்பது காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. பழங்காலத்தில் மக்களை பாதுகாக்க விலங்குகளோடு போராடி வீரமரணம் அடைந்தோரின் நினைவாக நடுகற்கள் நடும் பழக்கம் இருந்தது. அந்த நடுகற்களில் வீரர்களின் சாகசங்கள் இடம்பெற்றிருக்கும். தமிழகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை மதுரை, திண்டுக்கல், கோவை, தர்மபுரி, வேலுார் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, கொடைக்கானல், தாண்டிக்குடி, கொழிஞ்சிப்பட்டி, அணைப்பட்டி, சித்தர்கள்நத்தம், பெரியகோட்டை, கள்ளிமந்தையம் பகுதிகளில் காணப்படுகின்றன. காந்திகிராம பல்கலை தமிழ் பேராசிரியர் முத்தையா கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வில், நடுகற்கள் பெரும்பாலும் 13ம் நுாற்றாண்டுக்கு பின் நாயக்கர்கள் காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. பேராசிரியர் முத்தையா கூறியதாவது: சங்க காலத்தில் இருந்தே வீரர்களின் நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வந்துள்ளன. இந்த கற்கள் வீரருடைய புகழை பேசுவதற்காக எழுப்பப்பட்டவை. இதில் வீரரின் விபரம், யாருக்காக சண்டை செய்தார் போன்ற விபரங்கள் இருக்கும். ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்திய புலிகள், பன்றிகளுடன் சண்டையிட்டு இறந்தோரின் நினைவாக அதிகளவில் நடுகற்கள் நடப்பட்டுள்ளன. மலைப்பகுதி போன்ற சில இடங்களில் 2 கி.மீ., உயரத்தில் கூட கற்கள் உள்ளன,

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar