கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் ஆவணி அவிட்ட பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில், தில்லை கோவிந்தராஜபெருமாள் கோவில் ஆகியவற்றில் ஆவணி அவிட்டத்தையொட்டி யஜுர் வேத சம்பிரதாயப்படி பூணூல் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பிராமணர்கள், ஆரிய வைசியர்கள், வாணியசெட்டியார் சமுதாயத்தினர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோவிலுக்கு சென்று விநாயகர் வழிபாடு செய்து பூணூல் மாற்றுவது வழக்கம். அதன்படி கலச பூஜைகள் செய்து, வேத விற்பன்னர்கள் பூணூல் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியினை மந்திரங்களை வாசித்து செய்து வைத்தனர். பூணூல் மாற்றிக்கொண்டவர்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர்.
திருச்சி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, திருச்சி, ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் காவிரியாற்று படித்துறையில் அமர்ந்து, ஏராளமானோர் பூணூல் அணிந்து கொண்டனர்.