Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகர் சிலை பணிகள் ... வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவான் நாமத்தை சொல்வதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2015
12:09

அன்னுார்:பகவான் நாமத்தை சொல்வதற்கே, நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும், என்று, அன்னுாரில் நடந்த ஆன்மிக சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசினார். அன்னுார் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், 69ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்து வருகிறது. இதையொட்டி, மகாபாரத தொடர் சொற்பொழிவு துவக்க விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீட வித்வானும், ஆன்மிக சொற்பொழிவாளருமான திருச்சி கல்யாண ராமன் பேசியதாவது:பகவான் நாமத்தை சொல்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். தங்கம், வைரம், வைடூரியம் அணிந்த பசுவை, வேத பிராமணனுக்கு தானமாக கொடுத்தால், என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மகாபாரத கதையை கேட்டாலே கிடைக்கும். தீய விஷயங்கள், நாம் இருக்கும் இடத்துக்கே வரும். உயர்ந்த விஷயங்களை நாம் தேடிச் சென்று தான் பெற வேண்டும். பக்தி இல்லாத கெட்டிக்காரத்தனத்தால் பயனில்லை. மக்கள், உள்ளூர் கோவில்களை விட்டு, வெளியூர் கோவில்களுக்கு செல்கின்றனர். உடலில் தெம்பு இருக்கும்போதே ஆன்மிக யாத்திரை செல்ல வேண்டும். இந்து மதம் பலவீனப்பட்டுள்ளது. அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த புண்ணியம், சிதம்பரம் கோவிலை தரிசித்தாலே கிடைக்கும்.திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லை நடராசரை தரிசித்தால் புத்தி; அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே முக்தி; காசியில் இறந்தால் முக்தி.இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.மகாபாரத தொடர் சொற்பொழிவு வரும், 14ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு நிறைவு நாள் சொற்பொழிவு நடக்கிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ ராமானுஜ பக்தஜன பேரவையினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar