கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அங்குள்ள படிகளையும் தெய்வாம்சமாகக் கருதி தொட்டுக் கும்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு கோயிலில் உள்ள படிகளில் பக்தர்கள் தலையை மூன்று முறை முட்டிக்கொள்கிறார்கள். பழநியில் இடும்பன் மலைக்கருகில் வடக்கு கிரி வீதியிலுள்ள வல்லப விநாயகர் கோயிலில்தான் பக்தர்கள் அப்படிச் செய்கிறார்கள். அதனால் அருள்பாலிக்கும் விநாயகரும் தீராத தலைவலி தீர்க்கும் வல்லப விநாயகர் என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார்.