பதிவு செய்த நாள்
24
செப்
2015
11:09
கரூர்: கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில் நடந்த, திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், புரட்டாசி பெருந்திருவிழா நிகழ்ச்சி கடந்த, 13ம் தேதி துவங்கியது. அன்று முதல் பல்லக்கு உற்சவம், கருட வாகனம், ஹம்ஸவாகனம், சிம்மவாகன உற்சவம், ஹனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகன உற்சவம் நடந்தது. ஏழாம் நாளான நேற்று முன்தினம், மாலை, 4.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கல்யாண வெங்கடரமண ஸ்வாமி, திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் கரூர், தான்தோன்றிமலை, சுங்ககேட், பசுபதிபாளையம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.