எத்திராஜர் என்று குறிப்பிடப்படுபவர் ராமானுஜர். துறவிகளை வடமொழியில் யதி என்று சொல்வர். துறவிகளில் சிறந்து விளங்கியதால் ராமானுஜருக்கு யதிராஜர் என்று பெயருண்டு. இச்சொல்லே எத்திராஜர் என்றாகி விட்டது. ராமானுஜரின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் குழந்தைகளுக்கு எத்திராஜ் என்று பெயரிடுவர். யதி என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் அடக்கியவர் என்பதாகும். ஐம் புலன்களையும், மனதையும் அடக்க வல்லவரே துறவியாக முடியும் என்பதால் யதி என்று குறிப்பிடுவர்.