ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஓவியங்கள் புதுப்பிக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2015 11:10
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள மூலிகை ஓவியத்தை புதுப்பிக்க வேண்டும்,என பக்தரகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் உள்ள சிலைகள் மற்றும் சன்னதிகள் புதுப்பிக்கபட்டன. ஆதிரெத்தினேஸ் வரர், சிநேகவல்லிதாயார் கருவறை முன்புள்ள சுவற்றில் பண்டைய கால ஓவியங்கள் மூலிகைகளால் வரைய பட்டுள்ளன. அந்த மூலிகையை தவிர, மற்ற வர்ணங்களால் புதுப்பித்தால், சுவரில் பாதிப்பு ஏற்படும் என்று தொல்லியல் துறையினர் கூறியதால் வர்ணபூச்சு நடக்கவில்லை. நேற்று தமிழக சட்டசபையில் கோயில்களில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,"தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களை புதுப்பிக்கும் போது திருவாடானை ஆதிரெத்தினேஸ் வரர் கோயிலிலும் மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இக் கோயிலில் சுற்று பிரகார தளம் மோசமாக உள்ளது. அதற்கும் அரசு நிதி ஓதுக்கி, தளத்தை புதுப்பிக்க வேண்டும், என்றனர்.