Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 72 அடி உயர சாய்பாபா கோவில் ... திருமலை பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு! திருமலை பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூர வதம்: பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூர வதம்: பக்தர்கள் குவிந்தனர்!

பதிவு செய்த நாள்

23 அக்
2015
10:10

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசூர வதம் நடந்தது. கர்நாடக மாநிலம் மைசூரு தசரா விழாவிற்கு அடுத்து இக்கோயில் விழா பிரசித்தி பெற்றது.அம்மை நோய் கண்டவர்கள் முத்தாரம்மனை வழிபட்டால் குணம் பெறுவர் என்பது நம்பிக்கை. குணமடைந்தவர்கள் மாறு வேடத்தில் கோயிலுக்கு வருவதாக வேண்டிக் கொள்வர். நினைத்தது நிறைவேறவும், கஷ்டங்கள் நீங்கவும் இந்த வேண்டுதல் மேற்கொள்வர். வேண்டுதல் நிறைவேற்றுவோர், கோயில் கொடியேற்றத்தில் இருந்து, வீட்டிற்கு வெளியே ஓலைக்கூரை அமைத்து அதில் விரதம் இருப்பர். தசரா குழுக்கள்: இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் தசரா செட்கள் (குழுக்கள்) அமைத்துக்கொள்வர். இதில் 10 முதல் அதிகபட்சமாக 40 பேர் வரை இருப்பர்.

இவர்கள் காளி, மாரி, ஆஞ்சநேயர், பெண், போலீஸ் என வேடங்களில் ஊர்ஊராக சென்று காணிக்கை வசூலிப்பர். பின், கோயிலுக்கு செல்வர். கோலாகலம்: நேற்று முன்தினம் முதல் ஏராளமான பக்தர்கள் மாறு வேடத்தில் குவிந்தனர். நேற்று, அம்மனை வணங்கி காணிக்கை செலுத்திவிட்டு, கடற்கரையில் திரண்டனர். மகிஷாசூர வதம்: பக்தர்கள் முன்னிலையில் நேற்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. அம்மன் சிம்ம வாகனத்தில், கடற்கரையில் உள்ள சிதம்பரேசுவரர் கோயிலில் இரவு 12 மணிக்கு எழுந்தருளினார். அங்கு மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நாளை மாலை அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும்.போலீஸ் குவிப்பு: திருவிழாவுக்காக போக்குவரத்து, திருச்செந்துாரில் இருந்து ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஊருக்கு வெளியே ௨ கி.மீ.,க்கு முன் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அஷ்வின் கோட்னீஸ் எஸ்.பி., தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar