Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகரில் புலி வேடமிட்டு ... மணக்குள  விநாயகர் தங்க தேரில் வீதியுலா! மணக்குள விநாயகர் தங்க தேரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா
எழுத்தின் அளவு:
ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா

பதிவு செய்த நாள்

23 அக்
2015
10:10

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் தேர் உற்சவம் நடந்தது.மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று முதல், 20ம் தேதி வரை, தினமும் காலையில் அபிஷேகம், திருமஞ்சனம்; மாலையில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவை, திருப்பாவை சாற்றுமறை; கேடய உற்சவம்; சுவாமி வீதியுலா; திருவாய்மொழி சாற்றுமறை என, நடைபெற்றது. நேற்று முன்தினம், ஆளவந்தார் அறக்கட்டளை சார்பில், பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவம் நடந்தது. கோவிலில், வழக்கமான வழிபாடு முடிந்து, ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பூதத்தாழ்வார், காலை 7:15 மணிக்கு, அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, அவருக்கு, ஸ்தலசயன பெருமாள் மரியாதை அளித்தார்.அதை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, வீதியுலா புறப்பட்டார். பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என, முழக்கமிட்டு, மாடவீதிகளில் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்ல, வீதிகளில், பக்தர்கள் சுவாமியை தரிசித்து வழிபட்டனர். வீதியுலா முடிந்து, பிற்பகல் 2:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. அதேநாளில், பொய்கையாழ்வார் திருநட்சத்திர நாளை முன்னிட்டு, மாலை 4:30 மணிக்கு, சுவாமி, தாயார், பொய்கையாழ்வார் ஆகியோருக்கு, அபிஷேக திருமஞ்சனம் நடந்தது. இரவு, சுவாமி வீதியுலா சென்றார்.நேற்று, காலை 8:00 மணிக்கு, பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், அதைத்தொடர்ந்து, இரண்டாம் திருவந்தாதி சேவை, பூதத்தாழ்வார் உற்சவருக்கு திருமஞ்சனம், சுவாமி, தாயார், ஆண்டாள், நரசிம்மர் ஆகியோரிடம் மங்களாசாசனம் என, நடந்தது. சுவாமி, ஆழ்வாருக்கு, திரு கைத்தல சேவை செய்தார். ஆழ்வார், பொதுப்பணி துறை சாலை, ஆதிவராக பெருமாளை யும் தரிசித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் முதல் கனும சாலையில் உள்ள அக்ககர்லா கோவிலில் நேற்று காலை சப்த ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த முடியேற்று நடன நாடகம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.கேரள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar