Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் நவராத்திரி இறுதி ... கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி வழிபாடு கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாண்டியா ஆட்டமும் ஆட... தசரா கூட்டமும் கூட...!
எழுத்தின் அளவு:
தாண்டியா ஆட்டமும் ஆட... தசரா கூட்டமும் கூட...!

பதிவு செய்த நாள்

24 அக்
2015
10:10

கோவையில் வடமாநில இளம்பெண்கள், முகத்தில் சிவப்பு வண்ணச்சாயங்களை பூசி, தாண்டியா நடனமாடி தசரா விழா கொண்டாடினர். நவராத்திரி ஒன்பது நாட்கள் முடிந்து, பத்தாம் நாளில் தசாரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கோவை பீளமேடு சுகுணா திருமண மண்டபத்திலும், ராம்நகர் எஸ்.கே.வி.கே. ஹாலிலும் தசரா விழா நடந்தது. அங்கு வடமாநில கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருந்த பிரமாண்ட காளி தேவி சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காளிக்கு பிடித்த, இனிப்பு, கார வகை பதார்த்தங்கள், பல வகையான உணவுகள் படைக்கப்பட்டன. காலை மற்றும் மாலை இரவு என்று மூன்று நேரங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஒன்பது நாட்கள் நவராத்திரி நிறைவடைந்து, 10ம் நாளான நேற்று, தர்பா என்றழைக்கப்படும் தாண்டியா நடனம் நடந்தது. இளம்பெண்கள் கைகோர்த்து நடனமாடினர். அதற்கேற்ப இசை இசைக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். குஜராத்தியர், மராத்தியர், வங்காளிகள் உட்பட வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் விழாவில் பங்கேற்றனர். மக்கள் சிவப்பு வண்ணத்தை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர். பின், துர்க்கை சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று, குளங்களில் கரைத்தனர். ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும், நவராத்திரி விழா நாட்களில் தொடர் விரதம் மேற்கொண்டு, சர்க்கரை, உப்பு, துவர்ப்பு, நெய், எண்ணெய், காரம் இல்லாத உணவை ஒரு நேரம் மட்டும் உட்கொண்டு உபவாசம் இருந்தனர். ஒன்பது நாட்கள் விரதத்தை நிறைவு செய்து, பத்தாம் நாளான நேற்று தசரா விழாவை கொண்டாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar