திருப்புத்தூர்: திருப்புத்தூர் கோயில்களில் அம்பு எய்தல் நிகழ்வுடன் நவராத்திரி விழா நிறைவடைந்தது. பூமாயிஅம்மன் கோயிலில் அக்.,13ல் துவங்கிய விழாவில் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு பூமாயி அம்மன் அருள்பாலித்தார். மாலை லட்சார்ச்சனை நடந்தது. பத்தாம் நாளன்று இரவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வந்து அம்பு எய்து சூரனை வதைத்தார்.