Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் சேவை செய்ய ... திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது! திருவண்ணாமலை தீப திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுர வாசலுக்கு தசாவதாரம் சிலையுடன் கூடிய கதவுகள்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுர வாசலுக்கு தசாவதாரம் சிலையுடன் கூடிய கதவுகள்!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
12:11

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ரங்கா ரங்கா கோபுர நுழைவாயிலுக்கு, தசாவதார சிலைகள் வடிக்கப்பட்ட பிரம்மாண்ட கதவு நேற்று காலை பொருத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், மகா சம்ப்ரோஷணம் நாளை, காலை நடக்கிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று காலை கோவிலில் மூலஸ்தானம் மற்றும் அருகிலுள்ள துலுக்க நாச்சியார் மண்டபம் ஆகிய இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தன. சம்ப்ரோஷணத்துக்கு பின் பக்தர்கள் மூலவரை தரிசிக்க ஏதுவாக, வரிசையில் செல்ல தடுப்புகள் அமைத்துள்ளனர். ராஜகோபுரம், சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள கதவுகளுக்கு வாழை மரங்கள் கட்டியும், தென்னை, பாக்கு பச்சை மட்டை பழங்களை கொண்டு அலங்கரித்த தோரணங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள தடுப்பு வேலிகள் மற்றும் ஓவியங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் மேற்கொண்டு உள்ளனர். நாளை நடைபெறும் சம்ப்ரோஷணத்தின் போது, தங்க விமானம் பகுதிக்கு மேலே செல்ல படிக்கட்டுகள் அமைத்தும், அவற்றின் உறுதித் தன்மை சோதிக்கும் பணி மேற்கொண்டனர். கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம், ஆயிரம் கால் மண்டபம், மணல் வெளிக்கு செல்லும் நுழைவாயில் கதவு ஆகியவற்றுக்கு பிரம்மாண்ட கதவுகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கோவிலின் பிரதான நுழைவாயிலான ரங்கா ரங்கா கோபுரத்தின் நுழைவாயிலுக்கு, ஏற்கனவே இருந்த கதவுகளை அகற்றி விட்டு, 15 லட்சம் ரூபாயில் செய்யப்பட்ட, இரண்டு டன் எடையுள்ள தேக்கு மரக்கதவுகளை நேற்று பொருத்தினர். இந்த கதவுகளில் பெருமாளின் அவதாரங்களான மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி அவதாரம் உள்ளிட்ட பத்து அவதாரங்கள் சிலைகளாக இடம்பெற்று இருந்தன. பித்தளை குமிழ்களுக்கு தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தி இருந்தனர். அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய இந்த பிரம்மாண்ட கதவு அனைவரையும் கவர்ந்தது. அதுபோல தாயார் சன்னதிக்கு பிரமாண்ட கதவு, அழகிய வேலைப் பாடுகள் கொண்ட நிலைக் கண்ணாடி ஆகியவை புதிதாக செய்து பொருத்தி, விழாவுக்கு தயார் படுத்தி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar