Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காணாமல் போன 2,600 ஆண்டு மஹாவீரர் சிலை ... சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்மேடு பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

சபரிமலை:பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 2மணிக்கு பின் புல்மேடு வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், என கேரளா கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார். வண்டிபெரியாறு, உப்புப்பாறை, சத்திரம், புல்மேடு வழியாக தமிழகம் மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் மகரவிளக்கு நாளில் நடைபெற்ற விபத்துக்கு பின்னர் இந்த பாதையில் அரசு நிர்வாகம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்திரத்துக்கு தனியார் வாகனங்கள் அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் பெரும்பாலான பக்தர்களும் கால்நடையாகவே வருகின்றனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சிறிய பஸ்களை இயக்குவது வழக்கம். இந்த சீசனில் இன்னும் இயக்கப்படவில்லை.புல்மேடு கடந்த பின்னர் பக்தர்கள் அடர்ந்த காடு வழியாக வரவேண்டும். இதனால் மதியத்துக்கு பின்னர் வரும் பக்தர்கள் காட்டில் வழிமாறி காட்டுக்குள் சிக்கி சிரமப்பட வேண்டிவரும். இதை கருத்தில் கொண்டு பகல் இரண்டு மணிக்கு பின்னர் வரும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள், என கூடுதல் டி.ஜி.பி., பத்மகுமார் கூறினார். இரண்டு மணிக்கு பின் வரும் பக்தர்கள் சத்திரத்தில் தங்க வைக்கப்பட்டு அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக புல்மேடு, சத்திரம் பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முதல் கால யாக பூஜைகள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி தீப விழா நடந்தது.புதுச்சேரி – ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் இன்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை திருப்பதி கோவிலில், பாஞ்சராத்த தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar