திருச்சனூர் பத்மாவதி கோயிலில் பல்லக்கு தூக்கும் அதிகாரிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2015 02:12
திருப்பதி: ரயில்வேயிலும்,பாங்கிலும்,ஐடி துறையிலும் அதிகாரிகளாக பணியாற்றி ஆறு லக்கத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் 41 பேர் சுவாமிக்கு பல்லக்கு தூக்குவதை விருப்பமான சேவையாக செய்துவருகின்றனர். திருமலை திருப்பதி கோயிலுக்கு உள்பட்ட திருப்பதி திருச்சனூர் பத்மாவதி கோயிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவ விழா நடந்துவருகிறது. இந்த பத்து நாள் திருவிழாவில் பத்மாவதி தாயார் வலம் வரும் பல்லக்கை தூக்குபவர்கள் வழக்கமாக பல்லக்கு தூக்குபவர்கள் கிடையாது.
ரயில்வே,பாங்க் மற்றும் ஐடி துறையில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள்,இவர்கள் கடந்த 21 வருடங்களாக இதை ஒரு வேண்டுதலாக செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி ஐயங்கார் தலைமையிலான இந்த குழுவினர் இதற்காக வருடத்தில் பத்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்துவிடுகின்றனர். பல்லக்கு தூக்குவதற்கு வேண்டிய உடல்பலத்திற்காக இவர்கள் எண்ணெய் மற்றும் மசாலா போன்ற பொருட்களை உணவில் சேர்த்து கொள்வதும் கிடையாது, இதை எல்லாம் விட எங்களுக்கு பல்லக்கு தூக்குவதற்கு தேவையான மனபலத்தை பத்மாவதி தாயாரும் சீனிவாசப்பெருமாளும் அருள்வதுதான் நிஜம் என்கின்றனர்.