திருப்பரங்குன்றம் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2015 10:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழியை முன்னிட்டு நாளை(டிச.,17) முதல் ஜன., 14 வரை நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும். டிச., 17ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதல், டிச., 26ல் ஆருத்ரா தரிசனம், டிச., 27 - 31 வரை எண்ணெய் காப்பு உற்சவம் நடக்கிறது. திருநகர் சித்தி விநாயகர் கோயில் நடை அதிகாலை 4.30 மணி முதல் காலை 10.30 மணிவரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.