Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவனூர் கோவிலில் சொர்க்கவாசல் ... பெரியகுளம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு பெரியகுளம் பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகதுருகம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்
எழுத்தின் அளவு:
தியாகதுருகம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்

பதிவு செய்த நாள்

22 டிச
2015
11:12

தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடந்தது. தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் மார்கழி மாத முதல் தேதியில் இருந்து சிறப்பு பூஜைகள் துவங்கியது. தினமும் மூலவர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் பஜனையும் நடந்தது. நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்ட அதிகாலை 3:00 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனுவாசபெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதியுலா நடந்தது.

சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்திபிள்ளை, தி.மு.க., அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ரங்கராஜிலு, பேரூராட்சி தலைவர் விஜயாராஜூ, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம்சுந்தர், துளுவவேளாளர் சங்க தலைவர் கண்ணன், ஆரிய வைசிய சங்க தலைவர் அபரஞ்சி, பிச்சாண்டிபிள்ளை, நல்லாப்பிள்ளை, வேலு எலக்டிரிக்கல்ஸ் உரிமையாளர் சிவக்குமார், தே.மு.தி.க., அவைத்தலைவர் கோவிமுருகன், நகர செயலாளர் முருகன், வள்ளியம்மாள் பள்ளி முதல்வர் சுரேஷ், டாக்டர் நடேசன், தனமூர்த்தி அறக்கட்டளை தலைவர் பழனிவேல், கூட்டுறவு சங்க செயலாளர்கள் ராஜேந்திரன், பாலாஜி, முருகன், பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், சுகுமாறன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று, கோவிலில் அன்னதானம் நடக்கிறது.

விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியையொட்டி விழுப்புரம் வைகுண்டவாசபெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியை யொட்டி விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு மகா தீபாராதனை, 6:00 மணிக்கு ஸ்ரீ ஜனகவல்லி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர் வாசு பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar