பதிவு செய்த நாள்
25
டிச
2015
10:12
கோபிசெட்டிபாளையம்: மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோபியில் உள்ள, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. காலை, 7.15 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார். அதையடுத்து, 8.10 மணிக்கு கொடியேற்றப்பட்டு, 8.15 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி கோபால், குண்டத்துக்கு முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம், பூக்களை அள்ளி வீசினார். கூடியிருந்த பக்தர்கள், அதை லாவகமாக பிடித்தனர். பின்னர், குண்டத்தில் இருந்து நெருப்பை இரு கைகளால் அள்ளி வீசி, சரியாக, 8.20 மணிக்கு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என மொத்தம் 4,000 பக்தர்கள் வரிசையாக, அம்மனை வணங்கியபடி, பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.