Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ்: தமிழகம் முழுவதும் ... திருப்பூர் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரியங்காவு கோயிலில் திருக்கல்யாணம்: சாஸ்தாவுடன் புஷ்கலா ஜோதி ஐக்கியம்!
எழுத்தின் அளவு:
ஆரியங்காவு கோயிலில் திருக்கல்யாணம்: சாஸ்தாவுடன் புஷ்கலா ஜோதி ஐக்கியம்!

பதிவு செய்த நாள்

25 டிச
2015
10:12

ஆரியங்காவு: கேரளா மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயில் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, மாம்பழத்துறை புஷ்கலாதேவி ஜோதி ரூப ஆவாஹனம் நேற்று நடந்தது. ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலில் சவுராஷ்டிரா குல வழக்கப்படி தர்மசாஸ்தா புஷ்கலாதேவி திருக்கல்யாண வைபவம் ஆண்டு தோறும் மார்கழியில் நடக்கும். இதை முன்னிட்டு மாம்பழத்துறை புஷ்கலாதேவியை ஜோதி ரூபமாக ஆவாஹனம் செய்து ஆரியங்காவிற்கு அழைத்து (பெண் அழைப்பு) செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இங்கு சவுராஷ்டிரா சமூகத்தினரை சம்பந்தி முறை வைத்து, கும்பமரியாதை வழங்குவது ஐதீகம். பெண் அழைப்பு விழாவிற்காக வந்திருந்த ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க தலைவர் கே.ஆர்.ராகவன், பொதுக்காரியதரிசி எஸ்.ஜெ.ராஜன் மற்றும் நிர்வாகிகளுக்கு, புஷ்கலாதேவி கோயில் கமிட்டி தலைவர் சந்திரசேகரன், செயலாளர் பிரகாஷ், உறுப்பினர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

பின், கோயில் தந்திரி தலைமையில் ஜோதி ரூப ஆவாஹனம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஜோதி ரூபத்தை சவுராஷ்டிரா சமூகத்தினர், கோயிலில் வலம் வந்து அலங்கார தேரில் அமர்த்தி பூஜைகள் செய்தனர். மாம்பழத்துறையில் இருந்து நெடும்பாறை, கழுதைரொட்டி, தென்மலை உள்ளிட்ட 18 முக்கிய கோயில்களில் ஜோதிரூப தரிசனம் நடந்தது. நேற்று மாலை ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்த தேருக்கு சவுராஷ்டிரா சமூகத்தினர், கேரள பக்தர்கள் வழிநெடுகிலும் வரவேற்பு அளித்தனர். மாலை 6.30 மணிக்கு ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு ஜோதி ரூபம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதை பெற்று கொண்ட கோயில் தந்தரி, தர்மசாஸ்தா ஜோதியுடன், புஷ்கலாதேவியின் ஜோதி ரூபத்தை ஐக்கியமடையச் செய்தார். அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாம்பழத்துறையில் புஷ்கலாதேவி ஜோதிமய சவுராஷ்டிரா மகாஜன சபை நிர்வாகிகள் மோகன், அமர்நாத், குப்புசாமி, கணேஷ், பாஸ்கர், நிர்வாகிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்தம் இன்று (டிச.,25) இரவு 8 மணிக்கு நடக்கிறது. நாளை (டிச.,26) இரவு 10 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதில கேரள, தமிழக அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar