Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விழுப்புரம் கோவிலில் ஆருத்ரா ... பிரளயகாலேஸ்வரர் கோவில் நடைபாதையில் பனிப்படராத அதிசயம்! பிரளயகாலேஸ்வரர் கோவில் நடைபாதையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் மாநாடு துவக்கம்!
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் மாநாடு துவக்கம்!

பதிவு செய்த நாள்

26 டிச
2015
05:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் நேற்று ராமகிருஷ்ணர், சாரதாதேவி, விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் 23 வது மாநாடு துவங்கியது. காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் விவேகானந்தர் பக்தர்களின் மூன்று நாள் 23 வது மாநாடு மாநாட்டின் துவக்க விழா நேற்று காலை 8:00 மணியளவில் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஆண்மீகவாதிகள் சொற்பொழிவு கலை நிகழ்ச்சி, கவி மன்றம், இன்னிசை நிகழ்ச்சி என அனைத்தும் நடக்கிறது. காலை முதல் மாலை வரை நடக்கிறது.அதனை தொடந்து மாநாடு மலர் வெளியிட்டு  துவக்க உரையாக ‘இல்லத்தாருக்கு குரு தேவரின் உபதேசம்’ என்ற தலைப்பில் சுவாமி கெளதமானந்தஜி மஹராஜ் பேசியதாவது;

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களை கேட்வர்களுக்கும் படிப்பவர்களுக்கும் அனைத்து வித செல்வங்களும் வந்து சேரும். எவ்வளவு செல்வம் இருந்தாலும் நிலையற்றது. இந்த உடலும் நிலையற்றது. 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மரண பயம் வந்துவிடும். கடைசி காலத்தில் வருத்தப்பட்டு பயன் இல்லை. மரண பயத்தில் இருந்து தப்பிக்க இறைவனை நினைக்க வேண்டும். பக்தியால்தான் மரண பயத்தை போக்க முடியும். இறைவனிடம் அன்பு, பக்தி இருந்தால் இறைவனை காணமுடியும். யார் இறைவனை காண்கிறார்களோ அவர்களே இறைவன் ஆகிறார்கள். இறைவன் எங்கே இருக்கிறார் என்று கேட்டவருக்கு அவரவர் இதயத்தில் இருக்கிறார் என்றார்.

இறைவனை எப்படி காணலாம் என்றால் நான், என்னுடையது என்ற அகங்கார திரை நீங்கினால் இறைவனை காணலாம். பக்தியால் அகங்காரம் குறையும் அகங்காரம் பின்னால் பல வகையான ஆசைகள் உள்ளன. பக்தியை பெருக்கி காமத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். இறைவனை வழிபடுவதன் மூலம் காமமும் குறையும். நல்லோர் நட்பு இருந்தால் பக்தி வழிபாடு எளிதாகும். யாரை பார்த்து இறைவன் ஞாபகம் வருகிறதோ அவர்கள்தான் நல்லோர். பக்தியில் மூலம்தான் உலக வாழ்க்கை நிலையற்றது என்று புரியும். கடைசி காலத்தில் துன்பம் இல்லாமல் வாழ ஜெபம், பக்தியை வளர்த்து கொண்டால் நிம்மதியாக வாழலாம். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar