Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகரின் திருமணம் நடைபெற்ற தலம்! என்றும் நிலைத்திருக்கும் ஏழு பேர்! என்றும் நிலைத்திருக்கும் ஏழு பேர்!
முதல் பக்கம் » துளிகள்
நோய் தீர்க்கும் அபிஷேக நீர்!
எழுத்தின் அளவு:
நோய் தீர்க்கும் அபிஷேக நீர்!

பதிவு செய்த நாள்

28 டிச
2015
05:12

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம் பொருளை ஓரிடத்தில் குவிக்க வைக்கும் கோயில்கள் நம் பாரத பண்பாட்டுச் சின்னங்கள். ஒலியும், ஒளியும் தான் ஜீவனின் படைப்பு ஆதாரங்கள். இவ்விரண்டும் இணைந்து இறையருள் தரும் அற்புதக் கலைக்கூடமே கோயில்கள். கருங்கல்லில் ஒலி, ஒளி அதிர்வுகளைக் கடத்தும் திறன் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் கர்ப்பக் கிரகத்தில் கருங்கல்லில் சிலை வைத்தனர். ஆகம விதிகளின்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் உயரம், அகலம் மற்றும் கருவறை உள் அளவுப்படி சிலைகள் வடிக்கப்படுகின்றன.

ஓம் என்ற மந்திரம் தொடர்ந்து கருவறையில் ஒலிக்கும்போது அந்த ஒலி மூலஸ்தான கற்சிலையில் பட்டு எதிரொலிக்கிறது. அப்போது அங்குள்ள காற்று மண்டலம் ஒரே மாதிரியான அதிர்வைப் பெறுகிறது. இந்த கருவறையில் நிலவும் சக்தி மூலக்கூறுகள் வழிபடும் பக்தர்களை சென்றடையும் போது அவர்களின் மனம் அமைதி பெறுகிறது. தினசரி கோயில் வழிபாடு மனமகிழ்ச்சி தரும். நம்மை ரீசார்ஜ் செய்யும். கோயிலினுள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் பல்லாயிரம் மடங்கு பலன் தரும். கும்பாபிஷேகத்தின்போது சிலைக்கும், பீடத்துக்கும் நடுவில் அஷ்டபந்தனம் சாற்றுவார்கள். பலவிதமான மருந்து பொருட்கள் மற்றும் பஞ்ச லோகக் கலவையே அஷ்டபந்தனம். யாக சாலையில் உள்ள கலசத்திலிருந்து கற்சிலைக்கு தர்ப்பையினாலான கயிறு வரும். இது மந்திர சக்தி ஏற்றுவதற்கானதாகும். ப்ராணபிரதிஷ்டை செய்து இறையருளை விக்ரகத்தில் நிலைபெறச் செய்கின்றனர். பழனி பாலதண்டாயுதபாணி சிலை போகரால் நவபாஷாண கலவையினால் உருவாக்கப்பட்டது.

கற்சிலையில் தண்ணீர், பால், எண்ணெய், தேன், தயிர், விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் என ஒவ்வொரு பொருளையும் அபிஷேகம் செய்யும் போது மின்கடத்தும் திறன் வேறுபடுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதையே நம் முன்னோர்கள் ஒவ்வொரு அபிஷேகப் பொருட்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் எனக் கூறியுள்ளனர்.

அறிவியல் பலன்கள்: அபிஷேகத்தின் போது பல நிறங்களை மாறி மாறிப் பார்ப்பதால் கண்களில் உள்ள நரம்புத் துடிப்புகள் சீராக மாறி மன அமைதி ஏற்படும். கற்கண்டு, வாழைப்பழம், நெய், தேன், நாட்டு சர்க்கரை இந்த ஐந்து பொருட்களில் கூட்டுக் கலவையே பஞ்சாமிர்தம் எனப்படும். உடலின் வெப்ப சமன்பாடை அதிகரிக்க உதவும் பஞ்சாமிர்தத்தை அபிஷேகத்தின்போது சிலையின் மீது வைத்துத் தரும்போது இறையருளுடன் இணைந்து அமிர்தமாக மாறும். இதை பிரசாதமாக ஏற்று பலன் பெறுகிறோம். மேலும் அபிஷேக தீர்த்தம் நோய் தீர்க்கும் ஔஷதமாகத் திகழ்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar