Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெல்லம்பட்டி மாரிமுத்து சித்தர் ... பழநி தங்கரதம் சாதனை: மூன்றே நாட்களில் 367 பேர் இழுத்தனர்! பழநி தங்கரதம் சாதனை: மூன்றே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் ஜெகதளா எத்தையம்மன் திருவிழா நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2015
06:12

குன்னூர்: குன்னூர் ஜெகதளாவில், நடந்து வந்த எத்தையம்மன் திருவிழா நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்டத்தில், படுகர் இன மக்களின் எத்தையம்மன் திருவிழா, அருவங்காடு ஜெகதளா கிராமத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கடந்த மாதம் துவங்கியது.

Default Image
Next News

ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, நடத்தும் விழாவில் எத்தைகாரர்கள் எனப்படும் பக்தர்கள், 48 நாட்கள் விரதம் முடித்து, தாய்வீடான, கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறி வந்தனர். எத்தையம்மனை கன்னிதாயாக வழிபடும் காரக்கொரையில் பக்தி பரவசத்துடன் பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவிழா நாளான காலையில், ஜெகதளா ஓதனட்டி சுத்தக்கல், பகுதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதில், செங்கோல் மற்றும் குடைகளுடன் எத்தைக்காரர்கள் சுமார், 3 கி.மீ., துõரம் வனப்பகுதி வழியாக ஊர்வலமாக வந்து, ஜெகதளா எத்தையம்மன் கோவிலை  அடைந்தனர். அங்கு, நீலகிரியில் உள்ள பல்லாயிரக்கணக்கான படுக இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து, ஆடல் பாடல்களுடன் கொண்டாடினர். அம்மன் கோவிலை வந்தடைந்ததும் அங்கு, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அம்மாவாசை தீர்த்தவாரி ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
சிவகங்கை; மா‌னாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar