பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
மூங்கில்துறைப்பட்டு: ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு வெண்ணை காப்பு அலங்கார பூஜை நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, மூலநட்சத்திர ஹோமம் நடந்தது. தொடர்ந்து 12:00 மணியிலிருந்து 1:00 மணிக்குள் சுவாமிக்கு வடமாலை, வெற்றிலை, எலுமிச்சை, ரூபாய் ÷ நாட்டுகள், துளசி, பூமாலை அணிவித்து மஹா திருமஞ்சனம் நடந்தது, இதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணை காப்பு நிகழ்ச்சி முடிந்து, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசணம் செய்தனர். பக்தர்களுக்கு ÷ காவில் நிர்வாகம் அன்னதானம் வழங்கியது. கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் ஆ<<ஞ்சநேயர் சாமிக்கு 84ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 9:00 மணிக்கு, 17 வகை அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடி, மந்திர புஷ்பம் விநியோகித்து, அன்னதானம் வழங்கினர். தர்மகர்த்தா சீதாராமைய்யர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். சாமிக்கு வடைமாலை சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தனர்.