Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருச்செங்கோடு கிரிவலப்பாதையில் ... நீலமங்கலம் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச ஜோதி தரிசன விழா: வடலூரில் நாளை கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:01

கடலுார்: வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், தைப்பூச ஜோதி தரிசன விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இங்கு, 145வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நாளை 24ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த ஏழு நாட்களாக, தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதுதல், ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்து வருகிறது.தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், அந்தந்த பகுதி மக்களால் இன்று கொடியேற்றப்படுகிறது. காலை 10:00 மணிக்கு, பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில், ஞானசபையில் சன்மார்க்கக் கொடியேற்றப்படுகிறது.

முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம், நாளை காலை 6:00 மணி, 10:00, பகல் 1:00, மாலை 7:00, இரவு 10:00 மற்றும் 25ம் தேதி காலை 5:30 மணி என ஆறுகாலங்களில், ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகள் குறித்து, கடலுார் கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி., விஜயக்குமார், டி.ஆர்.ஓ., விஜயா ஆகியோர் ஆய்வு செய்தனர். அன்னதானம் நடக்கும் இடங்களில் குவியும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவது, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பிற்கு கேமராக்களை பொறுத்துவது, வாகனத்தில் அன்னதானம் வழங்க வருபவர்களை ஒரே இடத்தில் வழங்க செய்வது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை கண்காணித்து தடை செய்யவும் கலெக்டர் உத்தரவிட்டார். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், கூடுதல் போலீசாரை, பாதுகாப்பு பணிக்கு அமர்த்தவும், கலெக்டர் உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar