Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரோகரா கோஷத்துடன் பழநியில் ... திருப்பதி திருமலையில் கருடசேவை திருப்பதி திருமலையில் கருடசேவை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

பதிவு செய்த நாள்

25 ஜன
2016
10:01

வடலுார்:வடலுார் சத்திய ஞான சபையில், நேற்று நடந்த தைப்பூச ஜோதி தரிசன விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், நேற்று முன்தினம், 145வது தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜோதி தரிசனம்:முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணி; 10:00 மணி; பிற்பகல், 1:00 மணி; இரவு, 7:00 மணி; 10:00 மணி; இன்று அதிகாலை, 5:30 மணி என, ஆறு காலங்கள், கரும்பெருந்திரை, நீலப்பெருந்திரை, பச்சைத்திரை, செம்மைத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை என, ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என, மகா மந்திரம் முழங்கி, ஜோதி தரிசனம் செய்தனர். முதல் கால ஜோதி தரிசனத்தில், அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், ஊரன் அடிகள், ஞானானந்தா சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர். நாளை, 26ம் தேதி மதியம், 12:00 மணிக்கு வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை திறக்கப்பட்டு, மாலை 6:00 மணி வரை தரிசனம் நடக்கிறது. வெளிநாட்டினர் ஏமாற்றம்:வடலுார் சத்திய ஞான சபையில் தை மாதம் நடைபெறும் ஜோதி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் காலை, 6:00 மணி முதல், தரிசனத்தை காண சிங்கப்பூர், மலேஷியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பலர் வருவர். அவர்களை சன்மார்க்க சங்கத்தினர் அழைத்து வந்து வி.வி.ஐ.பி., நுழைவாயில் வழியாக தரிசனம் செய்ய அழைத்துச் செல்வர். இந்தாண்டு, போலீசார், வெளிநாட்டு பக்தர்களை உள்ளே அனுமதிக்காததால், பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar