Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தி விநாயகர் கோயில் ... தடையை மீறி கோவிலில் நுழைய முயன்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2016
11:01

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், நேற்றுமுன்தினம் இரண்டாம் நாள் தைப்பூச தேரோட்டம் நடந்தது.இக்கோவிலில் கடந்த ஜன. 17ம் தேதி, தைப்பூச தேரோட்ட விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.இதனை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை வேலாயுதசாமி உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி, பலி பீட பூஜையும், பொன் மலையை சுற்றி கிரிவலமும் நடந்தது. பின், கடந்த 24ம் தேதி, தைப்பூசத்தை ஒட்டி, மாலை, 4:30 மணிக்கு வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்தியுடன் தேரில் எழுந்தருளினார். முதல் நாள் தேரோட்டம் மலை அடிவாரத்தில் துவங்கி, மலையின் அக்னி மூலையான சிவலோகநாதர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளில் மாலை, 4:00 மணிக்கு சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து, அங்கிருந்து சீர் கொண்டு வந்தனர். பின், இரண்டாம் நாள் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதனை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, தேர் வடம் பிடித்து இழுத்துச்சென்று, மலையின் வாயு மூலையான கிருஷ்ணசாமிபுரம் பகுதியில் தேர் இரவு, 7:00 மணியளவில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு மூன்றாம் நாள் தேரோட்டம் நடந்தது. தேர் வரும் வழியில், மின் கம்பங்களின் ஒயர்களை மின்வாரியத்தினர் கழற்றிவிட்டு, தேர் சென்றவுடன் மீண்டும் மின் கம்பத்தில் ஒயர்கள் இணைத்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுப்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் வெண்மணி மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar