பண்ணாரி கோவில் உண்டியலில் ஒரு மாதத்தில் 46 லட்சம் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2016 12:01
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 20ம் தேதி நடந்தது. தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. கோயமுத்தூர் துணை ஆணையர் ஆனந்தம், பண்ணாரி மாரியம்மன் கோவில் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், 46 லட்சத்து, 34 ஆயிரத்து, 28 ரூபாய் ரொக்கமும், 238 கிராம் தங்கம், 768 கிராம் வெள்ளியும், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.