பதிவு செய்த நாள்
03
பிப்
2016
12:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வரும் 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 21ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபணம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜையும் நடந்தது. வரும் 26ம் தேதி பகல், 11:00 மணிக்கு மகா அபிேஷகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.