Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி காளியம்மன் கோயில் ... சின்னாளபட்டி மாயம்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சின்னாளபட்டி மாயம்பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போஜ்சாலாவில் பஞ்சமி விழா : அமைதியான வழிபாடு
எழுத்தின் அளவு:
போஜ்சாலாவில் பஞ்சமி விழா : அமைதியான வழிபாடு

பதிவு செய்த நாள்

13 பிப்
2016
01:02

தார்: மத்திய பிரதேச மாநிலம், தார் நகரில் உள்ள, போஜ்சாலா கோவிலில், ஹிந்துக்களின்,
வசந்த பஞ்சமி விழா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று அமைதியாக நடந்தது.

மத்திய அரசின், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை, ஹிந்துக்களும்,
முஸ்லிம்களும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வசந்த பஞ்சமி விழா நேற்று, வெள்ளிக்கிழமை வந்தது. இந்த நாளில், முஸ்லிம்களுக்கு அங்கு தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் நிலவியது; அதை, பக்குவமாக நிர்வாகிகள் கையாண்டனர்.

சூரிய உதயத்தில் இருந்து, மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 3:30 மணி முதல், சூரியன்
அஸ்தமனம் வரையிலும் வசந்த பஞ்சமி விழாவை நடத்தலாம்; மதியம், 12:30 மணி முதல்,
மாலை, 3:00 மணி வரை, முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என, அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு, சில ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், எவ்வித அசம்பாவித
சம்பவங்களும் இல்லாமல், அமைதியான முறையில், இரு மதத்தினரும் வழிபாடு நடத்தியதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நிம்மதி அடைந்தனர்.

கோவில், மசூதி:

*போஜ்சாலா வளாகத்தில், சரஸ்வதி கோவில் இருப்பதாக ஹிந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்; கமல் மவுலா மசூதி உள்ளதாக முஸ்லிம்களும் வழிபடுகின்றனர்.
*வழக்கமாக, செவ்வாய் கிழமைகளில் ஹிந்துக்களும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களும் வழிபட அனுமதிக்கப்படுகிறது; மற்ற நாட்களில், அனைத்து சமூகத்தினரும்
அனுமதிக்கப்படுகின்றனர்
*ஹிந்துக்களின் முக்கிய விழாவான வசந்த பஞ்சமி, வெள்ளிக்கிழமைகளில் வரும் போது தான் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு முன், 2003, 2006, 2013ல், வெள்ளிக்கிழமைகளில், வசந்த பஞ்சமி வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. அனைத்து கிரகங்களிலும் குருவே சுபமான கிரகமாக ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை கெங்கை அம்மன் கோவில் சாக்கை வார்த்தல் விழா நடந்தது.மணலூர்பேட்டை பஸ் ... மேலும்
 
temple news
கோவில்பாளையம்; கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில், இன்று (மே 1ம் தேதி) குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் அருகே களத்துப்பட்டி தேவி கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar