பதிவு செய்த நாள்
20
பிப்
2016
02:02
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடக்கும் ஹயக்கிரீவர் பூஜைக்கு, 1,200
மாணவர்கள், முன்பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்கிரீவர், தனி சன்னதியில்
எழுந்தருளியுள்ளார். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்,
நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெற்று, சிறப்பான இடத்தை பெறுவதற்காகவும், சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
கோவில் நிர்வாகம் மற்றும் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு, வரும், 21 மற்றும், 28ம் தேதியும்; 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மார்ச், 6, 13 மற்றும், 17ல், காலை, 9:00 முதல், 11:00 வரை, சிறப்பு பூஜை நடக்கிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 90474 36666 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, முன் பதிவு செய்யலாம். இதுவரை, 10ம் வகுப்பு மாணவர்கள், 600 பேரும்; பிளஸ் 2 மாணவர்கள், 600 பேரும், முன்பதிவு செய்திருந்தனர்.