பதிவு செய்த நாள்
26
பிப்
2016
11:02
பாவூர்சத்திரம்,:தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரில், 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் கொண்டு எழுந்தருளி உள்ளார்.வரும், ௨௮ம் தேதி அவருக்கு, சுவாதி நட்சத்திர பூஜை நடைபெறுகிறது. அன்று பிற்பகல், 3:௦௦ மணி முதல், 16 வைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்கள் நடக்க உள்ளன.பின், மாலை, 5:30 மணி அளவில், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பெருமாள் எழுந்தருளி, கங்கைக்கு இணையாக போற்றப்படும் நரஸிம்ஹ புஷ்கரணி எனப்படும் தெப்பக் குளத்தையும், கோவிலையும் வலம் வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், ஸ்ரீநரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.