Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் ... பத்ரகாளியம்மன் கோவில் பால் குட ஊர்வலம்: பக்தர்கள் பங்கேற்பு பத்ரகாளியம்மன் கோவில் பால் குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வெளியே வர புதிய வழி!
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் வெளியே வர புதிய வழி!

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
11:02

திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இருந்து வெளியே வர, புதிய வழியை ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்குள் செல்லவும், தரிசனம் முடித்து திரும்பி வரவும், கோவில் மகா துவாரத்தை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரே வழியை பயன்படுத்துவதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் சமயங்களில், கூட்ட நெரிச்சல் ஏற்படுகிறது.இதனால், பக்தர்கள் கோவிலுக்குள் நுழையவும், வெளியே வரவும் தனித்தனி வழி ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோவிலுக்குள் உள்ள, ம்ருத்யுஞ்ஜய சுவாமி சன்னதி பின்புறம் வழியாக, கோவிலில் இருந்து வெளியே வரும் வழியை ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழியில், பழங்கால அறை ஒன்று உள்ளது. அந்த அறை வழியாக, வெளியே செல்ல வழி ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஆந்திர அறநிலைய துறை அனுமதி பெற்று, உயர் அதிகாரிகள் முன்னிலையில், பல ஆண்டுகளாக பூட்டி இருந்த, அந்த அறையின் பூட்டை உடைத்து, கதவை திறந்தனர்.

அந்த அறையில் செப்பு, பித்தளையால் செய்யப்பட்ட பழங்கால பொருட்கள், பாத்திரங்கள், இரும்பு பைப், சண்டிகேஸ்வரர் சிலை ஆகியவை இருந்தன. அறையை சுத்தம் செய்து, அதன் ஒருபுற சுவரை உடைத்து, கோவிலை விட்டு வெளியே வரும் வழியை ஏற்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.ஓரிரு தினங்களில், மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் துவங்க உள்ளதால், பிரம்மோற்சவம் முடிந்ததும், வௌியே செல்லும் வழி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க, தேவஸ்தானம் திட்டமிட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு,பெருவுடயாருக்கு ஆயிரம் கிலோ அரிசி மற்றும் 500 ... மேலும்
 
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar