Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் ... திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்! திருநள்ளார் நளநாராயணப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: 13ல் நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா: 13ல் நடை திறப்பு!

பதிவு செய்த நாள்

03 மார்
2016
11:03

சபரிமலை: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா வரும் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக 13-ம் தேதி மாலையில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் இந்த ஆண்டு பங்குனி மாத பூஜையும், உத்திர திருவிழாவும் சேர்ந்து வருகிறது. இதற்காக 13-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். 14-ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்யதரிசனம் மற்றும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கும். காலை 7.30-க்கு உஷபூஜை நடைபெறும். காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துக்கான சடங்குகள் நடக்கும். கொடிபட்டத்துக்கு கோயில் முகப்பு மண்டபத்தில் சிறப்புபூஜைகள் நடைபெறும். தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக கோயிலை வலம் வரும்.10.20 முதல் 11 மணிக்குள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தங்க கொடிமரத்தில் கொடியேற்றுவார். விழாவின் எல்லா நாட்களிலும் இரவு ஒன்பது மணிக்கு பூதபலி நிகழ்ச்சி நடைபெறும். 15-ம் தேதி இரண்டாம் நாள் விழா முதல் 22-ம் தேதி ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் காலை 11.30-க்கு உற்சவபலி நடைபெறும்.22-ம் தேதி நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். 23-ம் தேதி காலை எட்டு மணிக்கு சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்தருளுவார். பகல் ஒரு மணிக்கு பம்பையில் ஆராட்டுக்கு பின்னர் மாலை மூன்று மணிக்கு புறப்படும் பவனி சன்னிதானம் வந்ததும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar