சத்தியமங்கலம்: குண்டம் விழாவை முன்னிட்டு, சத்தி பண்ணாரி மாரியம்மன் உற்சவர், கிராமங்களுக்கு சப்பரத்தில் உலா சென்று வருகிறது. நேற்று முன்தினம் சிக்கரம்பாளையத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கியது. அன்றிரவு புதூரில் சுவாமி தங்கியது. நேற்று காலை புதூர் பகுதியில் வீதி உலா முடிந்த பிறகு, வெள்ளியம்பாளையம் சென்றது. அப்போது புதூர் மக்கள் தரையில் படுத்து அம்மனை வழிபட்டு, வழியனுப்பி வைத்தனர்.