ராமநாதபுரம் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2016 11:03
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா காப்பு கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் பலர் காப்பு கட்டிக்கொண்டனர். தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்ச் 23 பங்குனி உத்திரதன்று பகலில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், இரவில் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் நிறைவு செய்கின்றனர். மார்ச் 24 இரவு முருகன் வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார்.
*மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன், மண்டபம் காந்தி நகர் சண்முகசடாச்சர வடிவேல் முருகன், குயவன்குடி சாது சுப்பையா, இடையர்வலசை முருகன், கோயில்களிலும் பங்குனி உத்திர விழா காப்புகட்டுதலுடன் நேற்று துவங்கியது. இக்கோயில்களில் மார்ச் 23ல் பக்தர்கள் காவடி, பால்குடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்றிரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்துள்ளனர்.