பதிவு செய்த நாள்
17
மார்
2016
11:03
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் நாளை (18ம் தேதி) நடக்கிறது. சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள், கடந்த 14ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, இன்று (17ம் தேதி) காலையில், பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், குண்டத்தில் பூர்ணாகுதி, திருவாராதனம், வேதபிரபந்த சாற்றுமுறை, கடம் புறப்பட்டு மூலவர், உற்சவர் மூர்த்திகளுக்கு ஆவாஹனம், திருமஞ்சனம், ஆரத்தி நடக்கிறது. நாளை (18ம் தேதி) காலை 6:00 மணிக்கு, விஸ்வரூபம், சுப்ரபாதம், கோபூஜை நடக்கிறது. தொடர்ந்து யாத்ராதானம், கடம் புற ப்பாடாகி, காலை 10:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசத்திற்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, உபயநாச்சியார் சகிதம் பெருமாள் சேஷவாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.