Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர ... மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் 5 டன் மலர்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2016
12:03

பழநி: பழநி பங்குனிஉத்திர திருவிழாவையொட்டி பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 5 டன் பூக்களால் பாதவிநாயகர் கோயில் முதல் மலைக்கோயில் உட்பிரகாரம் வரை அலங்கரிக்கப்படுகிறது.இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாதவிநாயகர் கோயில், மலைக்கோயில் உட்பிரகாரம், பாரவேல் மண்டபத்தில், மஞ்சள், பிங்க், ரோஸ் என பலவண்ண ரோஜா பூக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் இருந்து ஜருபுரா, அந்தோரியம், டச் ரோஜா பூக்கள், ஓசூர், சென்னை யில் இருந்து மல்லிகை, செவ்வந்தி உட்பட மொத்தம் 5 டன் பூக்கள் வந்து குவிந்துள்ளன. பாதவிநாயகர் கோயில் அருகே தென்னை ஓலைக் குருத்துக்களால் விநாயகரும், மலைக்கோயில் உட்பிரகாரத்தில் வண்ண மலர்களைக் கொண்டு மயில் ரங்கோலியும், திராட்சை, மாங்காய் தோரணங்களும் அமைக்கப்படுகின்றன. மலைக்கோயில் மண்டப துண்களை மாலைகள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கும் பணியில் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த சுவாமிநாதன் மற்றும் திருப்பதியில் புஷ்ப அலங்காரம் செய்யும் குணசேகரன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

குணசேகரன் கூறுகையில்,“ திருப்பதியை போல பழநிகோயிலில் 5 ஆண்டுகளாக வண்ண பூக்களால் அலங்காரம் செய்கிறோம். இவ்வாண்டு வெள்ளி ரதத்திற்கும் மலர் அலங்காரம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது,” என்றார். இதேபோல, திருஆவினன்குடி கோயிலில் பழநி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் 1000 கிலோ பூக்களால் அலங்காரம் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar