Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாகதுருகத்தில் காவடி ஊர்வலம் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமார வயலூரில் பங்குனி உத்திரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2016
01:03

திருச்சி: திருச்சி குமார வயலுார் முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. திருச்சி சோமரசம் பேட்டை குமார வயலுார் சுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று துவங்கியது. வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. பால் காவடி :விழாவில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால் காவடி எடுத்தும், அலகு குத்தி பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். மதியம், 12:00 மணிக்கு, பாலாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 10 மணிக்கு, சிங்கார வேலர் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.மார்ச், 26ம் தேதி, முருகப் பெருமான் வேலன், வேடன் விருத்தனாக வருதலும், தொடர்ந்து யானை விரட்டல் காட்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் இறுதி நாளான, 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. சென்னிமலை:ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நடந்தது. சுவாமி தேர் நிலையை மூன்று முறை வலம் வந்தது. காலை 6:40 மணிக்கு, தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாயும், ஆடி வெள்ளியும் ஆடி மாதத்தின் ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் சச்சிதானந்த தீர்த்த ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar